­அண்­ணா சாலையில் கார்­களில் கடத்­தி­வ­ரப்­பட்­ட 764 கிலோ குட்கா பறி­­முதல்: 3 பேர் கைது

170
சென்னை அண்ணாசாலை பகுதியில்  கார்களில்  குட்கா புகையிலை பொருட்களை கடத்தி  வந்த  3 நபர்களை போலீசார் கைது செய்­து 764  கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், ரொக்கம் ரூ.5,45,000 மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்­துள்­ள­னர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர்  ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அண்ணசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (09.05.2024) மாலை   ராயபேட்டை, மணிகூண்டு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த 3 கார்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், கார்களில் வைத்திருந்த பார்சல்களை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக கார்களில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்த வொற்­றி­யூரைச் சேர்ந்த தினேஷ் (27), ராஜஸ்தான் மதுசூதன் ஜான்கிட் (25), ராஜேந்திர பாரிக்கர் (29), ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 764 கிலோ எடை ஹான்ஸ், கூலிப், விமல், ரெமோ, ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், ரொக்கம் ரூ.5,45,000/-, 3 செல்போன்கள்  மற்றும்  குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் கர்நாடகா  மாநிலத்திலிருந்து குட்கா புகையிலைப்பொருட்களை கடத்தி  வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட  3 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் இன்று (10.05.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.