பொது மக்களிடையே வழக்கமான போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமின்றி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சென்னை பெருநகர காவல்துறை இடைவிடாது ஈடுபட்டு வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ( GCTP) மாணவர்களுக்கான பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்குவதற்காக பள்ளி மண்டலங்களுக்குள் ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய முயற்சியை உருவாக்கியுள்ளது.

அதன்பேரில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 09.02.2024 அன்று காலை சென்னை தி.நகரில் உள்ள வித்யோதயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் பாதுகாப்பு மண்டலங்களாக மாற்றுவதற்காக ’’பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் திட்டத்தை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு ரோந்து மாணவர்களுடன் (RSP) துவக்கி வைத்தார். அதே போல, இன்று (09.02.2024) சென்னையிலுள்ள பின்வரும் 4 பள்ளிகளிலும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையில், பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் சுமார் 500 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் திட்டத்தின் முக்கியப் பணிகள்
* காவல்துறையைச் சேர்ந்த முதன்மைப் பயிற்சியாளர்கள், போக்குவரத்து விதிகள், போக்குவரத்து விதிமுறைகள் திறன், பாதசாரிகள் பாதுகாப்பு, பாதுகாப்பான சாலையைக் கடத்தல், சைக்கிள் பாதுகாப்பு, போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் சிக்னல்களைப் புரிந்துகொள்வது, பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எடுத்துரைப்பர்.
* போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளை, பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தின் (PTA) உதவியுடன் பதிவு செய்யப்பட்ட பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் பள்ளி திறக்கும் மற்றும் மூடும் நேரங்களில் பள்ளி மண்டலங்களை சுற்றி மேற்கொள்ளப்படும்.
* பள்ளி வளாகத்தில் உச்ச பள்ளி நேரங்களில் போக்குவரத்து ஒழுங்குமுறை கடமைகள் தவிர, சகாக்கள் மற்றும் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் STV தன்னார்வலர்கள் சட்ட அமலாக்க முகவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவார்கள்.
4 பள்ளிகளில் இந்த முயற்சி வெற்றி பெற்றவுடன், சாலைப் பாதுகாப்பில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு மெகா பள்ளி பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் நோக்கத்துடன், சென்னை நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் இந்த முயற்சியை விரிவுபடுத்தும்.