காவல் வாரி­சு­க­ளுக்கு ரூ. 20 லட்சம் கல்வி உதவித் தொகை: தாம்­பரம் போலீஸ் கமி­ஷனர் அமல்ராஜ் வழங்­கி­னார்

116

காவல் வாரி­சு­க­ளுக்கு ரூ. 20 லட்சம் உத­வித்­தொ­கையை தாம்­பரம் மாந­கர போலீஸ் கமி­ஷ­னர் அமல்ராஜ் வழங்­கி­னார்.

தாம்பரம் மாந­கர காவல் ஆணையரகத்தில் பணிபரியும் காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அவர்­களை ஊக்­கு­விக்கும் வகையில் கல்வி உதவித் தொகை வழ­ங்கப்­பட்­டு வரு­கி­ற­து. அத­னை­யொட்டி கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த 10ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி காவல் வாரி­சு­கள் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல்துறை­யி­னரின் குழந்தைகளுக்கு காவலர் சேம நலநிதியிலிருந்து கல்­வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடை­பெற்­றது. காவல் வாரி­சு­க­ளுக்கு ரூ. 20 லட்சம் கல்வி உதவி ஊக்கத்தொகையை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார். இந்­நி­கழ்ச்­சியில் தாம்­ப­ரமர மாந­கர கூடுதல் கமிஷனர் மகேஷ்­வரி உள்­ளிட்ட காவல் அதி­கா­ரிகள் கலந்து கொண்­ட­னர்.