அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே 18 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது: அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை
அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அம்பத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கண்காணித்தனர். அப்போது அங்கு பையுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்திய கோவளத்தைச் சேர்ந்த காளஷா மஸ்தான் (25) காஞ்சிபுரம் பரத்குமார் (23) இருவரையும் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அம்பத்தூர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டனர்.