பொதுமக்கள் குறை தீர் முகாமில் பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார். மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (26.11.2025) பொதுமக்களிடம் இருந்து 18 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இந்த முகாமின் போது தலைமையிட துணைக்கமிஷனர் கீதா உடன் இருந்தார்.