சென்னை யானைக்­க­வு­னி­யில் ரூ. 15 லட்சம் ஹவாலா பணம் சிக்­கி­ய­து

141

சென்னை யானை­க்­க­வு­னியில் இரு­சக்­கர வாக­னத்தில் கடத்தி வர­ப்­பட்ட ரூ. 15 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறி­முதல் செய்து வரு­மா­ன­வ­ரித்­து­றை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­த­னர்.

நேற்று நள்­ளி­ரவு 11.30 மணி­ய­ளவில் யானைக்­கவுனி போலீஸ் தலைமைக்­கா­வலர் பாஸ்கர் பூக்கடை என்­­எஸ்சி போஸ் ரோட்டில் ரோந்துப் பணியில் இருந்தார். அப்­போது அந்த வழி­யாக பிரவுன் நிற ஜுபிடர் பைக்கில் வந்த சந்தேக நபரை பின் தொடர்ந்து சென்று சோதனை செய்­தனர். அவர் வைத்­தி­ருந்த பைக்குள் ரூ. 15 லட்சம் இருப்­பது தெரி­ய­வந்­தது. விசா­ர­ணையில் அந்த நபர் சென்னை புர­­சை­வாக்கம் கந்­தப்ப செட்டி தெருவைச் சேர்ந்­தவர் முக­மது முஸ்தாக் (வயது 38) என்­பது தெரி­ய­வந்­த­து. அது தொடர்­பாக யானைக்­க­வுனி இன்ஸ்­பெக்டர் கண்­ண­கிக்கு தகவல் தெரி­வித்­தனர். அத­னை­ய­டுத்து முக­மது முஸ்­தாக்கை ரூ. 15 லட்சம் பணத்­துடன் யானைக்­க­வுனி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்­தினர். அந்த பணம் கணக்கில் வராத ஹவாலா பணம் என்­பது தெரி­ய­வந்­தது. அத­னை­ய­டுத்து அவரை போலீசார் வரு­மா­ன­வ­ரித்­துறை அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைத்­தனர். இந்த சம்­பவம் தொடர்­பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வரு­கின்­றனர்.