சோமங்­க­­லத்தில் காரில் கடத்தி வரப்­பட்ட 284 கிலோ குட்கா புகை­யி­லைப் பொருட்கள் பறி­மு­­தல்: இருவர் கைது

127

தாம்­பரம் காவல் ஆணை­ய­­ர­கத்­துக்­குட்­பட்­ட சோமங்­க­லத்தில் காரில் கடத்தி வரப்­பட்ட 284 கிலோ குட்­காவை .வாகன சோத­னையின் போது போலீசார் பறி­முதல் செய்து 2 பேரை கைது செய்­த­னர்.

தாம்­பரம் காவல் ஆணைய­ர­கத்தில் தமி­ழக அரசால் தடை­செய்­யப்­பட்ட குட்கா உள்­ளிட்ட புகை­யிலைப் பொருட்கள் கடத்தல் தொடர்­பாக தீவி­ரமாக கண்­கா­ணிக்­கப்­பட்டு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்ப்­பட்டு வரு­கின்­றன. இதன் தொடர்ச்­சி­யாக தாம்பரம் மாநகரக் காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரிலும், ­கூ­டுதல் கமி­ஷனர் மகேஸ்வரி, தாம்­பரம் துணைக்­க­மி­­ஷனர் பவன்குமார் ரெட்டி மேற்­பார்­வையில் மணி­மங்­கலம் உத­விக்­க­மி­ஷனர் இளஞ்செழியன் சோமங்­கலம் இன்ஸ்­பெக்டர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் நிதீஷ்கண்ணா தலை­மை­யி­லான தனிப்­ப­டை­யினர் தீவி­ர­மாக கண்­கா­ணித்து வந்­தனர்.

இன்று 25.09.2024 காலையில் 6.30 மணிய­ளவில் புதுநல்லூர் சோதனை சாவடி அருகில் தனிப்­ப­டை­யினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்­போது புதுநல்லூரிலிருந்து சோமங்கலம் நோக்கி வந்த டி.என். 10-பிபி-9066 என் பதிவு எண்கொண்ட கிரேடா காரை தனிப்­படை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காருக்­குள் ­இ­ருந்த 49.2 கிலோ ஹான்ஸ், 25.2 கிலோ கூல் லிப், விமல்- 133.5 கிலோ ஏ1 15.75 கிலோ ஸ்வாகத் கோல்டு 60.3 கிலோ, ஆகியவை பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவற்றை கடத்தி வந்த ராஜ்குமார் (27), கணேஷ் பாபு (23) ஆகிய இரு­வ­ரையும் போலீசார் கைது செய்தார்கள். விசா­ர­ணைக்குப் பின்னர் இரு­வரும் கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டனர்.