1,776 கர்­நா­டக மது பாக்­கெட்­டுக்கள் பறி­மு­தல்: அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு போலீசார் நட­வ­டிக்­கை

57

பெங்­க­ளூ­ருவில் இருந்து தமி­ழ­கத்­துக்கு காரில் கடத்தி வரப்­பட்ட 1,776 மது பாக்­கெட்­டுக்­களை தமி­ழக அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு போலீசார் பறி­முதல் செய்தனர்.

பெங்­க­­ளூ­ரு­வில் இருந்து பேர­ணாம்­ப­ட்­டுக்கு மது பானங்கள் கடத்தி வரு­வ­தாக தமி­ழக அம­லாக்­கப்ப­ணியக குற்­றப்­பு­­ல­னாய்வுப் பிரி­விற்கு ரகசிய தகவல் வந்­தது. கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில் இன்ஸ்­பெக்­டர் சுந்­தரி தலை­மையில் தமி­ழக ஆந்­திர எல்­லை­யான பேர­ணாம்­பேட்டு வி. கோட்டா கூட் ரோட்டில் தீவிர வாகன சோத­னையில் ஈடு­பட்­டனர். அந்த வழி­­யாக வந்த காரை மடக்கி சோத­னை­யிட்­டதில் காரின் சீட்­டு­க­ளுக்கு அடியில் அட்­டைப்­பெட்­டிக்குள் கர்­நா­டகா மது­பாட்­டில்கள் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. காரை ஓட்டி வந்­தவர் பேர­ணாம்­பேட்டு தரைக்­காடு பகு­தி­யைச் சேர்ந்த பயாஸ் அக­மது (39) என்­பவரை போலீசார் கைது செய்­த­னர். அதே பகு­தி நாயக்­க­­னேரியைச் சேர்ந்­த சந்­தோஷ்­குமார் ­என்­ப­வ­ருக்கு மது பாக்­கெட்­டுக்­களை வாங்கி வந்­ததாக போலீ­சாரின் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­த­து. ­

அ­த­னை­ய­டுத்து காரில் 21 அட்­டைப்­பெட்­டி­க­ளுக்குள் பது­க்கி வைக்­கப்­பட்­டி­ருந்த 180 மிலி அளவு கொண்ட 1,008 மது பாக்­கெட்­டுக்கள், 90 மிலி அளவு கொண்ட 768 மது பாக்­கெட்­டுக்கள், என மொத்தம் 1,776 மது பாக்­கெட்­டுக்­களை போலீசார் பறி­முதல் செய்­தனர். பயாசை கைது செய்த போலீசார் விசா­­ர­ணைக்குப் பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்தி சிறையில் அடைத்­தனர். தலை­ம­றை­வான சந்தோஷ் குமாரை தேடி வரு­கின்­றனர்.வாகன சோத­னையில் மது ­பாக்­கெட்­டுக்­களை பறி­முதல் செய்த இன்ஸ்­பெக்டர் சுந்­தரி உள்­ளிட்ட தனிக்­கு­ழு­வி­னரை கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகு­வாக பாராட்­டி­னார்.