சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ. 50 லட்சம் அபேஸ் * கேரள ஆசாமிகள் நால்வர் கைது

134

சிபிஐ அதி­கா­ரிகள் போல பேசி ரூ. 50 லட்சத்தை அபேஸ் செய்த கேரளா ஆசா­மிகள் நால்­வரை தாம்பரம் காவல் ஆணை­ய­ரக சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர்.

சென்னை, தாம்­பரம், இரும்­பு­லி­யூ­ரைச் சேர்ந்­தவர் சுரேஷ்குமார் (52). இவர் தாம்பரம் போலீஸ் கமி­ஷனர் அமல்­ரா­ஜிடம் ஒரு புகார் மனு அளித்­தார். அதில் அவர் கூறி­யி­ருந்­த­தா­வது, ”44720754022 என்ற தொலை பேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட நபர் TRAI யிலிருந்து பேசுவதாக கூறினார். நான் பயன்படுத்தி வந்த தொலைபேசி எண்ணிலிருந்து பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்கள் செய்யப்­பட்­டுள்­ளதாகவும், அந்­தக் ­குற்றத்திற்காக மும்பை போலிஸ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்தார். மேலும் என்னை Skype செயலி மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் தெரி­வித்தார்.

பண மோசடி வழக்கில் கைதான நபர்களுடன் எனக்கு தொடர்பிருப்பதாகவும் தெரி­வித்த அந்த நபர் விசாரணைக்கு என­து வங்கிக் கணக்கிலிருந்து அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணம் ரூ. 50 லட்சம் அனுப்புமாறும், இல்­லை­யென்­றால் கைது செய்து விடுவோம் என­வும் மிரட்டல் விடுத்தார். அதை நம்பி நான் பணத்தை அனுப்பினேன். ஆனால் இதுவரை நான் செலுத்திய தொகை திரும்பி வரவில்லை. என்­னிடம் பண மோச­டியில் ஈடு­பட்­டுள்­ளனர். அவர்கள் மீது நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும்”” என தெரி­வித்­திருந்­தார்.

அந்த புகாரின் மீது உரிய நட­வடிக்கை எடுக்­கும்­படி கமி­ஷனர் அமல்ராஜ் தாம்­பரம் மத்­திய குற்­றப்­பி­ரிவு துணை ஆணையர் சுப்­பு­லட்­சு­மிக்கு உத்­த­ர­விட்டார். அதன் பேரில் சைபர் ­கிரைம் பிரிவு போலீசார் வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்­தி­னர். ரூ. 50 லட்சம் அனுப்பப்பட்ட மோசடியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் மோசடி செய்யப்பட்ட பணமானது கேர­ளா­வைச்­ சேர்ந்த அப்­ரித், மற்றும் வினீஷ் ஆகி­­யோ­ரது வங்கிக் கணக்குகளில் பெறப்பட்டது தெரிய வந்தது. அத­னை­ய­டுத்து தனிப்டை போலீசார் கேரளா மாநிலம் சென்று அப்ரித், முனீர், பசலு ரஹ்மான், வினீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்­தனர். அவர்களிடமிருந்து குற்றத்திற்காக பயன்படுத்தப்­பப்ட 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ­நால்­வரும் தாம்­பரம் குற்றவியல் நீதிமன்றதில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­ட­னர்.

CBI போலிஸ் போல் ஆள்மாறாட்ட மோசடி (Fedex, CBI Police), பகுதி நேர வேலை மோசடி(Part time job) அல்லது டெலிகிராம் டாஸ்க் ஸ்கேம் தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் Cyber Help Line No. 1930 or National Cyber Crime Reporting Portal www.cybercrime.gov.in என்ற Website மூலம் புகார் அளிக்கலாம் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகுமாறும் பொதுமக்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் ­அ­­அ­மல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.