சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (16.08.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து 15 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 23 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி. சரட்கர், துணை ஆணையாளர்கள், ராதாகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.