ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (08.05.2024) போலீஸ கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நடந்த இந்தக் குறைதீர்ப்பு முகாமில் ஆவடி கூடுதல் காவல் ஆணையாளர் ராஜேந்திரன், ஆவடி துணை கமிஷனர் அய்மன்ஜமால் மற்றும் செங்குன்றம், மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர்கள், காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டனர். பொதுமக்களிடம் 50 புகார் மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு, உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குறைதீர்க்கும் முகாம் வாரம் தோறும் புதன் கிழமை நடைபெறும் என ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.