தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புதிய காவல் நிலையம் உதயம்: போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்தார்
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புதிய காவல் நிலையம் மேடவாக்கம் காவல் நிலையம் இன்று துவங்கப்பட்டது. அதனை தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்தார். தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய காவல் நிலையங்கள் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி அரசு ஆணை எண் G.O No.(Ms) No 348 Dated – 18.06.2024 ன் படி தாம்பரம் மாநகர காவல், பள்ளிக்கரணை மாவட்டம், சேலையூர் சரகத்திற்குட்பட்ட T-14 பள்ளிக்கரணை காவல் நிலையம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. மேடவாக்கம், கோவிலம்பாக்கம் மற்றும் நன்மங்களம் பஞ்சாயத்து க்குட்பட்ட பகுதிகளை இணைத்து புதிதாக மேடவாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இன்று 18.07.2024 காலை 11 மணியளவில் தாம்பரம் காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்தார்.