கரூர் மாவட்டத்துக்கு புதிய எஸ்பியாக ஜோஷ் தங்கையாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா சென்னை ஆவடி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்துக்கு புதிய எஸ்பியாக தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த ஜோஷ் தங்கையா நியமிக்கப்பட்டுள்ளார். குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று, டிஎஸ்பியாக தமிழக காவல்துறையில் சேர்ந்த ஜோஷ் தங்கையா சென்னை கீழ்ப்பாக்கம் உதவிக்கமிஷனர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டிஎஸ்பியாகவும், பின்பு பதவி உயர்வு பெற்று சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், அதனையடுத்து எஸ்பியாக பதவி உயர்ந்து சென்னை தாம்பரம் காவல் ஆணையரகம் துவங்கப்பட்ட போது பள்ளிக்கரணை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டவர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் எம்ஏ முதுகலைப் பட்டம் மற்றும் எம்பில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.