சிறு­வனின் கல்­விக்கு உதவிய இன்ஸ்­பெ­க்டர்: ஆவடி கமி­ஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்­டு

87

சென்னை ஆவ­டியில் சிறு­வனின் கல்­விக்கு உத­விய இன்ஸ்­­பெக்­டரை கமி­ஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டி, சிறு­வ­னையும் வாழ்த்­தினார்.

சென்­னை, ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஹரிஸ். ஏழை குடும்­பத்தைச் சேர்ந்த சிறு­வன் ஹரிஸ் ­­கல்விக் கட்­டணம் கட்ட முடி­யாமல் தவித்து வந்­தான். இதனால் தனக்கு தெரிந்­த­வர்கள் மூலம் காவல்­துறை உத­வியை நாடினான். பூந்தமல்லி இன்ஸ்­பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு தனது பள்ளி படிப்பை தொடர உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டதின் பேரில், இன்ஸ்­பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சிறுவனை ஆவடி சின்ன அம்மன் கோவில் அருகில் உள்ள நபி கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்த்துள்ளார். நன்கொடையாளர்கள் உதவியுடன் சிறுவனுக்கு சீருடைகள் மற்றும் பள்ளி புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து உதவிகளை செய்தார்.
இது குறித்து தகவல் தெரிய­வந்­ததும் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் பூந்தமல்லி இன்ஸ்­பெக்டர் கிருஷ்­ண­மூர்த்­தி­யையும் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் சிறுவனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து நன்றாக படிக்கும்படி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.