சென்னை நகரில் ரவுடிகள் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.
சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள அருண் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”சென்னை நகர போலீஸ் கமிஷனராக என்னை அமர வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி. அவரது பெயரை காப்பாற்றும் வ கையில் நடந்து கொள்வேன். தமிழ்நாட்டிலும் சரி, சென்னை நகரிலும் சரி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொலைகள் குறைந்துள்ளன. குற்றங்களை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வேன். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் சொல்லி புரிய வைப்போம். காவல்துறையில் லஞ்ச ஊழல்கள் கண்டுபிடித்து ஒழிக்கப்படும். ஆர்ம்ஸ்ட்ராங்க் கொலை குறித்து நான் இப்போது கருத்து கூற விரும்பவில்லை. அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அருண் கூறினார்.