திமுக ஒன்றியச் செயலாளர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை: ஊராட்சி மன்றத் தலைவி, கார் டிரைவர் கைது
தாம்பரம் மாநகர காவல், ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்ட வண்டலூர் பகுதியில் வசித்து வந்த காட்டாங்குளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் (தி.மு.க) மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் V.S.ஆராமுதன் (56). கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதியயன்று வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் மாலை 7 மணியளவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 8 நபர்கள் அவரின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 கொலையாளிகள் கடந்த 01.03.2024 ஆம் தேதி சத்தியமங்கலம் நீதிமன்றத்திலும், 04.03.2024 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 4 பேரும் சரணடைந்தனர்.

எட்டு பேரையும் ஐந்து நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் ஆராமுதன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. இறந்து போன ஆராமுதன் வண்டலூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த வந்த தேர்தலில் மேற்கண்ட ஊராட்சி தாழ்த்தப்பட்ட மகளிர் தொகுதியாக்கப்பட்டதால் அப்பதவிக்கு முத்தமிழ்ச்செல்வி போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவியாக வெற்றி பெற்றார். அப்பதவியில் ஏற்ககனவே இருந்த ஆராமுதனுக்கு தி.மு.க-வில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பினும் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஆராமுதனுக்கு அனைத்து மரியாதைகளும் கிடைப்பதாக எண்ணி அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் முத்தமிழ்ச்செல்வி, ஆராமுதனை கொலை செய்ய தனது கார் டிரைவர் துரைராஜ் மூலமாக ரவுடி கனகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு ரூ. 20 லட்சம் தருவதாகக் கூறி அவர்களை வைத்து திட்டமிட்டபடி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதனையடுத்து இன்று 18.-03.-2024 ஆராமுதன் கொலை வழக்கில் முத்தமிழ்செல்வி மற்றும் அவரது டிரைவர் துரைராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.