பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி போலீஸ் கமிஷனர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்று வருகிறார். இதன் தொடர்ச்சியாக கமிஷனர் அருண் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், பொதுமக்களின் 47 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது தலைமையிட துணை ஆணையாளர் மேகலினா உடன் இருந்தார்.