ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறு­வனம் மீது சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் வழ­க்குப்­ப­தி­வு

139

பணத்தை பெற்றுக் கொண்டு சலுகை வழங்­காமல் மோசடி செய்­த­தாக பிர­பல ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறு­வனம் மீது சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் வழ­க்குப்­ப­தி­வு செய்­துள்­ள­னர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் “ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்” என்ற நிறுவனம் தமி­ழகம் ­மட்­டு­மின்றி இந்­தியா முழு­வதும் உள்­ள­ன. சுற்­றுலா செல்லும் பய­ணிகள் சென்று தங்­கு­வ­தற்கு வச­தி­யாக இங்கு சொகுசு வி­டு­திகள் வாட­கைக்கு விடு­கின்­றனர். இந்­நி­­லையில் சலு­கைகள் வழங்­கு­வ­தற்கு பணத்தை முன்­கூட்­டியே பெற்றுக் கொண்டு அவற்றை வழங்­காமல் மோசடி செய்­த­தாக ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறு­வனம் மீது சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அலு­வ­­ல­கத்தில் ஒரு புகார் மனு அளிக்­கப்­பட்­­டுள்­ளது.

அந்த புகார் மனுவில் பாதிப்­ப­டைந்த நபர் கூறி­யி­ருந்­த­தா­வ­து, ”கடந்த 2019ம் ஆண்டு என்னை தொடர்பு கொண்டு, தாங்கள் ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்டில் உறுப்பினராக சேர்ந்தால் வருடம் 15 நாட்கள் வீதம் இந்தியா முழுவதும் உள்ள விடுதிகளில் 25 ஆண்டுகள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என்றும், வேறு சேவைக் கட்டணம் ஏதுமில்லை என்றும் கூறினர். அதனை நம்­பிய நான் ரூ 7.5 லட்சம் பணத்தை செலுத்தி கடந்த 2019ம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்­தேன். ஆனால் 2020ஆம் ஆண்டு மட்டும் இலவச சேவையை வழங்கிவிட்டு, அதன் பின்பு ஏதாவது காரணம் சொல்லி, தொடர்ந்து சேவை வழங்காமல் ஒவ்வொரு வருடமும் ஏமாற்றி வந்தனர். கடந்த மார்ச் மாதம் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்­டனர். ஆகவே ஸ்டெர்லிங் ஹாலிடே நிறு­வன நிர்­வா­கிகள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கூறி­யி­ருந்­தார்.

அதனைத் தொடர்ந்து இந்த புகார் தொடர்­பாக சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் விசாரணை நடத்­தினர். இதில் புகார் உண்மை என்­பது தெரி­ய­வந்­தது. அத­னை­ய­டுத்து ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் தயால் லால்வாணி, துணைத் தலைவர் சித்ரா மற்றும் இயக்குனர்கள் லதா ராமநாதன், மாதவன் மேனன், சுமித் மகேஸ்வரி, பர்வீர் குமார் வோரா ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, ஆவண மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்துள்­ள­னர் இது தொடர்­பாக தொடர்ந்து விசா­ரணை நடந்து வரு­கி­றது.