12 ஆண்­டுகள் தலை­ம­றை­வாக இருந்த நபரை தட்டித் தூக்­கிய சிசிபி போலீஸ்

69

ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்து 12 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர்.

சென்னை, கொடுங்­கையூர், கடும்­பா­டி­யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது குடும்பத்திற்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம், ரெங்கராஜபுரம் மெயின் ரோடு, புலியூர் கிராமத்தில் 2 கிரவுண்ட் 932 சதுர அடி நிலம் உள்­ளது. ரூ. 6 கோடி மதிப்புள்ள இந்தச் சொத்தை தங்கமணி, டேனியல்குமார், சிவா, விஜயகுமார் ஆகி­யோர் நிலத்தின் உரிமையாளர் போன்று ஆள்மாறாட்டம் செய்த சரவணன் உட்பட சிலர் கூட்டு சேர்ந்து ஆள்மாறாட்டம் மற்றும் போலியான ஆவணங்கள் தயார் செய்து வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்­ளனர். இது தொடர்­பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் சென்னை சூளைமேடு மற்றும் அண்ணாநகரை சேர்ந்த எதிரிகள் விஜயகுமார் மற்றும் சரவணன் ஆகியோர்களை கடந்த 2013-ம் வருடம் மே மாதம் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் மற்றொரு முக்கிய எதிரியான சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தினில்குமார் என்பவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா வழிகாட்டுதலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்­து வந்­தது.

அவரைத்தேடி வந்த நிலையில் தினில் குமார் பல இடங்களில் அவ்வப்போது தன் இருப்பிடத்தை மாற்றி வசித்து வந்த நிலையில் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்னை சைதாப்பேட்டையில் வைத்து தினில்குமாரை தனிப்­படை போலீசார் இன்று (09.07.2025) கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.