செவ்வாய்ப்பேட்டையில் ஆவடி கமிஷனர் சங்கர் நேரில் ஆய்வு

156

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செவ்வாய்ப்பேட்டை காவல் எல்லை, தொழுவூரில் தொடர் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினார். மேலும் அந்த பகுதியில் உள்ள தெருக்களில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைளை கேட்டறிந்தார்.