சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் காவலர்களை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி சரகம், கண்ணகிநகர் காவல் நிலைய எல்லையில் நேற்று 20.04.24 மாலை 4.30 மணி அளவில் எழில் நகர் பகுதியில் ரோந்து பணியிலி ருந்த தலைமை புஷ்பராஜ் மற்றும் சிலம்பரசன் இருவரும் ரோந்து சுற்றி வந்தனர். எழில் நகர் 16 ஆவது பிளாக் அருகில் அந்த பகுதி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பிரேம் (23), எழில் நகர் ராகுல் (22), சந்தோஷ்குமார் (22) ஆகியோர் கஞ்சா போதையில் கைகளில் கத்தியை சுழற்றியபடி அந்த பகுதியில் சுற்றி வந்தனர். அதனைக் கண்ட ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கத்தியோடு வலம் வந்த கோகுல் என்ப வனை பிடித்து விசாரிக்க முயன்றனர். அப்போது ராகுல், தலைமைக் காவலர் புஷ்பராஜின் வலது கையை கடித்துள்ளான்.
\மேலும் போதையில் இருந்த மற்றொருவன் பிரேம், ராகுலை விடச் சொல்லி விட்டு தன் கையில் வைத்திருந்த உடைந்த பாட்டிலை வைத்து தன் நெஞ்சில் கிழித்து கொண்டு காவலர் சிலம்பரசனை தாக்க வந்துள்ளார். இதனால் காவலர்கள் அந்த இருவரையும் தங்கள் பிடியில் இருந்து விடுவித்தனர். அந்த சமயத்தில் இரு வாலிபர்களும் காவலர்க மீது கல் எறிந்து தாக்கினர். அதனையடுத்து தலைமைக் காவலர் புஷ்பராஜ் கண்ணகி நகர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் காவல் நிலையத்தில் காவலர் சிலம்பரசன் புகார் அளித்தார்.


மேலும் காவலர்களை போதை வாலிபர்களால் தாக்கப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காவலர்களை தாக்கிய போதை ஆசாமிகள் பிரேம், ராகுல், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து இன்று 21.04.2024 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.