சென்னை பெரும்பாக்கத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்: கூலித்தொழிலாளர்களுக்கு விற்க முயன்ற 2 பேர் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை
பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரசகிய தகவல் வந்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் 08.03.2025 ம் தேதி, சுமார் 8 மணியளவில் பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் மெயின் ரோடு, பொலினேனி அப்பார்ட்மண்ட் எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் ரகசியமாக கண்காணித்தனர்.

அங்கு நின்றிருந்த ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகுதி அப்பளநாய்டு (42), கெம்மெலி சத்திபாபு (32) ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 110 கிலோ கஞ்சா மற்றும் 1 கைபேசி கைப்பற்றப்பட்டது. கஞ்சாவை விசாகப் பட்டினம் மாநிலத்தில் இருந்து
வாங்கிவந்து பெரும்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் அது தொடர்பாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்து வருகின்றனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 22.03.2025 வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.