ரூ. 4 கோடி போதைப்­பொ­ருட்கள் தீயி­லிட்டு அழிப்­பு : அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு போலீஸ் நட­வ­டிக்­கை

54

தமி­ழகம் முழு­வதும் அம­லாக்கப் பணி­யக குற்­றப்­பி­ரிவு போலீ­சாரால் பறி­முதல் செய்­யப்­பட்­ட ரூ. 4 கோடி மதிப்­புள்ள கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொ­ருட்கள் இன்று தீயி­லிட்டு அழிக்கப்­பட்­டன.

போதையில்லா தமிழ்நாடு’ முயற்சியின் ஒரு பகுதியாக, தமி­ழக அம­லாக்­க­ப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு போலீ­சாரால் பறி­முதல் செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருட்கள் நீதி­­மன்ற உத்­த­ரவின் படி தீயி­லிட்டு அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதன் தொடர்ச்­சி­யாக நேற்று சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள 112 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3510. 68 கி உலர் கஞ்சா, 860 கிராம் மெத்தம்­பெட்டமைன், 239.600 கிலோ கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்கள் தீயி­லிட்டு எரி­ப்­ப­தற்­காக கொண்டு வரப்­பட்­டன. அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு

மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் அவை எரிக்கப்பட்டன. தமி­ழக அம­லாக்­கப்­ப­ணி­யக குற்றப்­பு­ல­னாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி டாக்டர் ஏ. அமல்ராஜ், ஐஜி செந்­தில்­கு­மாரி, எஸ்பி மயில்­வா­கனன் ஆகியோர் இதில் பங்­கேற்று போதைப்­பொ­ருட்­களை தீயி­லிட்­டனர். இந்த ஆண்டில் இது­வரை 355 வழக்குகளில் 7139.387 கிலோ உலர் கஞ்சா, 74.150 கி ஹசிஷ், 58 கி சாராஸ், 1 கி ஹெராயின், 241 கிலோ கஞ்சா சாக்லெட்போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினரால் எரிக்கப்பட்டது குறிப்­பி­டத்­தக்­கது.