மெடிக்கல் சீட் வாங்­கித்­த­ரு­வ­தாக ரூ. 31.88 லட்சம் ஏப்பம்: தலை­­ம­றை­வான கேடி பெண் கைது: சென்னை மத்­தியக் குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

99

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 31.88 லட்சம் மோசடி செய்து ஓரா­ண்டாக தலை­ம­றை­வாக இருந்த பலே பெண்ணை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்­ப­டு­வ­தா­வ­து:– கன்­னி­யா­கு­மரி மாவட்டம், மார்த்­தாண்டம், கிழங்கு விளை, முழங்குழி பகு­தியைச் சேர்ந்­தவர் ரோஸ்மேரி (45). கடந்த 2022-ம் ஆண்டு இவ­ரது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது தெரிந்த நபர்கள் மூலம் ­சென்னை மீனம்­பாக்­கத்தைச் சேர்ந்த அந்தோணிதாஸ், வளச­ர­வாக்­கத்தைச் சேர்ந்த ரம்யா ஆகியோர் அறி­மு­க­மா­கி­னர்.

மருத்துவக்கல்லூரி மற்றும் சுகாதாரத்துறையில் தங்­க­ளுக்­கு மிகுந்த செல்வாக்கு உள்ளதாகவும், சுகாதாரத்துறையில் அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்றும் அவர்கள் ரோஸ்­மே­ரியின் மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். மேலும் அதற்கு சுமார் ரூ. 50 லட்சம் பணம் செலவாகும் என கூறிய இரு­வரும்

 

ரோஸ்­மே­­ரியை சென்னை தேனாம் பேட்டையிலுள்ள டிஎ­ம்எஸ் அலுவலகம் வரச்சொல்லியுள்­ளனர். ரோஸ்­மே­ரியை நம்­ப­வைத்து கடந்த 08.02.2022 முதல் 19.5.2022 வரை பல தவணைகளாக ரூ.60,50,000- பணத்தை வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் பெற்றுள்ளனர். மேலும் ரோஸ்­மே­ரியின் மகளுக்கு கல்லூரி அட்மிஷன் கிடைத்து விட்டதாக போலியான ஆர்டரையும் காண்பித்து விடுதி கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறி மேலும் ரூ.1,38,000- பணத்தை ரம்யா பெற்றுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு எம்­பி­­பிஎஸ் சீட் வாங்­கித்­த­ராமல் கால­தா­மதம் செய்­துள்­ளனர்.

 தலை­ம­றை­வான அந்­தோணிதாஸ்

இது தொடர்­பாக ரோஸ்­மேரி பணத்தை திரும்பக் கேட்டு வற்புறுத்தியதால் ரூ. 29,50,000- பணத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதி பணம் ரூ. 31,88,000 மோசடி செய்து விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்­ளனர். இது குறித்து ரோஸ்மேரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் புகார் மனு அளித்தார். கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் மத்­திய குற்­றப்­பி­ரிவு கூடுதல் கமி­ஷனர் ராதிகா மேற்­பார்­வையில் நம்­பிக்கை ஆவண மோசடி பிரிவு போலீசார் நடத்­திய விசா­ர­ணையில் ரோஸ்மேரியிடம் அந்­தோ­ணிதாஸ், ரம்யா ஆகியோர் எம்­பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி பண­மோசடி செய்­தது உண்மையென தெரியவந்தது.

 

அதனைய­டுத்து இன்ஸ்­­பெக்டர் கமல்­மோகன் தலை­மை­யி­லான தனிப்­ப­டை­யினர் தலை­ம­றை­வான ரம்­யாவை நேற்று முன்­தினம் சோழிங்கநல்லூரில் வைத்து கைது செய்தனர். தலை­ம­றை­வான அந்­தோணிதாசை தேடி வரு­கின்­ற­னர். விசா­ர­ணையில் ரம்யா மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் பல கோடிகள் மோசடி செய்தது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்ப­து வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ரம்யா விசாரணைக்குப்பின் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு புழல் சிறையில் அடைக்­கப்­பட்­டார்.