ரூ. 15.5  கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ட்கள் எரித்து ­அழிப்பு: அம­லாக்கம் குற்­றப்­பு­ல­னாய்வுப்பிரிவு காவல்துறை நட­வ­டிக்­கை

69

ரூ. 15.5  கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ட்கள் தீயி­ழிட்டு அழித்து தமி­ழக அம­லாக்கம், குற்­றப் ­பு­ல­னாய்வுப் பிரிவு காவல்துறையினர் நட­வ­டிக்­கை மேற்­கொண்­டுள்­ள­னர்.

தமி­ழ­கத்தில் போதைப்­பொ­ருட்­களை அடி­­யோடு ஒழிக்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் உத்­த­ரவின் பேரில் அம­லாக்கம் குற்­றப்­பு­ல­னாய்வுப்பிரிவு காவல் ­து­றை­யினர் அதி­ரடி நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மேற்­பார்­வையில், ஐஜி செந்­தில்­கு­மாரி தலை­மையில் போதைப் பொருட்கள் ஒழிப்பு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதன் தொடர்ச்­சி­யாக கடந்த 12.08.2025 மற்றும் 13.08.2025 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரால் 959 வழக்குகளில் சுமார் 14,591.74 கிலோ உலர் கஞ்சா, 45.85 கிலோ சாரஸ் பறி­முதல் செய்­யப்­பட்­டன. மேலும் 4.6 கிலோ கஞ்சா சாக்லேட், 0.75 கிலோ மெத்தம்­பெட்டமைன், 2.02 கிலோ ஹாஷிஷ் ஆயில் மற்றும் 0.142 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட மொத்தம் ரூ. 15.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறி­முதல் செய்­யப்­பட்­டன. அவை சட்ட முறைகளை பின்பற்றி, செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ளஅங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது. ஐஜி செந்­தில்­கு­மாரி தலை­மையில் போதைப்­பொ­ருட்கள் தீயி­லிட்டு இன்று எரிக்­க­ப்­பட்­ட­ன.

நடப்பு ஆண்டில் (2025) இதுவரை, 1,314 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 21,731.127 கிலோ உலர் கஞ்சா, 76.17 கிலோ ஹாஷிஷ் ஆயில், 103.85 கிலோ சாரஸ், 1.142 கிலோ ஹெராயின், 245.6 கிலோ கஞ்சா சாக்லேட், 1.61 கிலோ மெத்தாம்பிட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை போதை பொருள் நுண்ணறிவு பிரிவினரால் எரித்து அழிக்கப்பட்டுள்ளது குறிப்­பி­டத்­தக்­க­து.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போதைப் பொருட்களை பாதுகாப்பாக அழிக்கும் பணிகளில் ஈடுபட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் துணை இயக்குநுர், தடயவியல் துறை ஆகியோரை அம­லாக்கம் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகு­வாக பாராட்­டி­னார்.