‘டாஸ்மாக் கடைகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்கலாம்’’: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

119

டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து ஊழியர்கள் வாங்கி கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை ரூ.20 ஆயிரம் வரை வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை ஊழியர்கள் பெறக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும், மீறி ரூ.2,000 நோட்டுகளை பெற்றால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்றும் வாய்மொழியாக டாஸ்மாக் நிர்வாக கூறியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரசு டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை டாஸ்மாக் ஊழியர்கள் பெறக் கூடாது என்று எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை. அது முற்றிலும் தவறான செய்தி என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.