கஞ்சா கடத்­திய நப­ருக்கு 12 ஆண்டு கடுங்­காவல் ஜெயில்: திண்­டுக்கல் கோர்ட் அதி­ரடி தீர்ப்­பு

204

கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 1 லட்­சம்- அபராதம் விதித்து திண்­டுக்கல் கோர்ட் அதிரடி தீர்ப்­பு வழங்­கி­யுள்­ள­து.

Enforcement Bureau Crime Investigation Department

போதை­யில்லா தமி­ழ­கத்தை உருவாக்­கும் நோக்கில் தமி­ழகம் முழு­வதும் அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னய்வுப் பிரிவு போலீசார் கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொ­ருட்­க­ளை கடத்தும் குற்­ற­வா­ளி­களை தீவி­ர­மாக கண்­கா­ணித்து அவர்­களை கைது செய்து வரு­கின்­றனர். டிஜிபி சங்­கர்­ஜிவால் உத்­த­ர­வின் பேரில் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மேற்­பார்­வையில், ஐஜி செந்­தில்­கு­மாரி வழி­காட்­டு­தலின் பேரில் போதைக்­க­டத்தல் தடுப்பு நுண்ண­றி­வுப்­பி­ரிவு போலீசார் போதைக்­க­டத்தலில் ஈடு­பட்டு கைதான குற்­ற­வா­ளி­களுக்கு நீதி­மன்றம் மூலம் தகுந்த தண்­டனை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு தீவி­ர­மாக செயல்­பட்டு வரு­கின்­றனர்.

பொன்னாங்கண்

திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியன்று வத்தலக்குண்டு வழி திண்டுக்கல் ரோடு, பேகம்பூர் சந்திப்பில் வாகன சோத­னையில் ஈடு­பட்­டனர். அப்போது அந்த வழி­யாக வாக­னத்தில் கஞ்சா கடத்தி வந்த திண்­டுக்கல் பகு­­தியைச் சேர்ந்த பொன்னாங்கண், ஜெயபாஸ்­ இரு­வ­ரையும் கைது செய்­தனர். அவர்­க­ளிடம் இருந்து 75 கிலோ கஞ்சா பறி­முதல் செய்­யப்­பட்­ட­து. இரு­வரும் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றக்­கா­வலில் சிறையில் அடைக்­கப்­பட்­டனர்.

இது தொடர்­பாக திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்­தினர். மேற்­கண்ட வழக்கு தொடர்­பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் 09.04.2025 அன்று இவ்­வ­ழக்கில் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. கஞ்சா கடத்தி வந்த முதல் குற்­ற­வாளி பொன்னாங்கண் என்பவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் திறம்பட புலன்விசாரணை மேற்கொண்டு மற்றும் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஐர் செய்து நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த புலன்விசாரணை அதிகாரிகள் மற்றம் ஆளிநர்களை அமலாக்கப்பணியக கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மற்­றும் ஐஜி செந்­தில்­கு­மாரி ஆகி­யோர் வெகு­வாக பாராட்­டி­னார்கள்.