வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு பணம் ரூ.24,600-, 5 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட எதிரி ஜாகிர் பாஷா விசாரணைக்குப் பின்னர் 27.12.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.ூ
மேலும் ஜாகிர் பாஷா கொடுத்த தகவலின்பேரில், H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய நாராயணன்(53) என்பவரை நேற்று (28.12.2024) கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.4,000/-, 1 இருசக்கர வாகனம், 2 செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நாராயணன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (28.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்