தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.
தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்படையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து இன்று (18.01.2024) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார். இதுவரை ரூபாய் 94,50,000- மதிப்புள்ள 875 காணாமல் போன செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி உன்னிக்கிருஷ்ணன், ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், சுதாகரன் உள்ளிட்டோரை எஸ்பி பாராட்டினார்.