சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அப்போது அவர் வைத்திருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் அந்திரா மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இருக்கும் வெளிமாநில தொழிலாளிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.