2015ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (12.12.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரி ராஜமாணிக்கம் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால், குற்றவாளி ராஜமாணிக்கத்திற்கு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 500- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த கொத்தவால்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்,