சென்னை, ஆவடியில் போலீஸ் கமிஷனர் சங்கர் நேரடியாக சென்று குட்கா ரெய்டில் ஈடுபட்டதில் 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
‘போதையில்லா தமிழகம்’ என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் போலீசார் வாரந்தோறும் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனைகள் நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் அந்தந்த கா
இந்தச் சோதனையின் போது மொத்தம் 113 கிலோ 850 கிராம் குட்கா, கூல்-லிப் மற்றும் பிற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிகளை மீறியவர்களுக்கு ரூ. 1,07,000- அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.