சென்னை, புளியந்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 நபர்களை போலீசார் கைது செய்து 733 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 733 மது பாட்டில்கள், 10 கிலோ மாவா, 5 கிலோ 100 கிராம் ஹான்ஸ் மற்றும் பணம் ரூ. 5,740- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பரத்குமார் மீது ஏற்கனவே 1 கொலைமுயற்சி வழக்கு, அடிதடி, கஞ்சா என 6 குற்ற வழக்குகளும், திருமலர் மீது 1 மதுபாட்டில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (06.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.