சென்னை, தி.நகர் பகுதியில் வீட்டில் திருடிய வேலைக்கார பெண் உட்பட 3 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 24 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, தி.நகர், சாரங்கபாணி தெருவில் வசித்து வரும் பங்கஜ் குமார் (32) என்பவரின் மனைவி சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை பார்த்தபோது, வளையல், நெக்லஸ், தங்கச்சங்கிலி உட்பட சுமார் 721 பவுன் தங்கநகைகள் மற்றும் ஐபோன் ஆகியவை காணாமல் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பங்கஜ்குமார் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை
அதன்பேரில், மேற்படி நபர்களிடமிருந்து 24 சவரன் தங்கநகைகள், 560 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர். நேற்று (29.02.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.