தமிழகம் முழுவதும் சிறைகளில் சிறை அதாலத் மூலம் வழக்குகள் பரிசீலனை செய்யப்பட்டு 202 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமத் பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை அமர்வு நீதிபதி S. செல்வ சுந்தரி, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை அமர்வு நீதிபதி J. மாவிஸ் தீபிகா சுந்தரவதனா, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தமிழ் செல்வி மற்றும் நீதிபதி. சுதா, மேலும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை முதன்மை நடுவர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நீதிமன்ற நடுவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சென்னை சரக டிஐஜி முருகேசன், சிறைக்கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.