சார்­ப­தி­வாளர் அலு­வ­ல­கத்தில் போலி கிர­யப்­பத்­திரம் சமர்ப்­பித்த வழக்கில் மேலும் இருவர் கைது: கம்­ப்­யூட்டர் உப­க­ர­ணங்கள் பறி­மு­தல்

சென்னை, சைதாப்­பேட்டை சார்­ப­தி­வாளர் அலு­வ­ல­கத்தில் போலி கிர­யப்­பத்­திர ஆவணங்கள் சமர்ப்பித்து ஏமாற்ற முயன்ற வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்­திய குற்­றப்­­பி­ரிவு போலீசார் நேற்று கைது செய்­த­னர். கம்ப்­­யூட்டர் உப­க­ர­ண­ங்கள் பறி­முதல் செய்­யப்­பட்­ட­ன.

சென்னை சைதாப்­பேட்டை சார்­ப­தி­வாளர் ராஜசேகர் என்­பவர் சென்னை போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்­தோ­ரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘சென்னை திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் உள்ள சுமார் 23 கிரவுண்ட் இடம் உள்­ளது. அதனை போலி­யான கிரய ஒப்­பந்தப் பத்­தி­ரத்தை தயா­ரித்து அருண் மல்கோத்ரா என்பவர் ஹர்ஷ் மல்கோத்ரா என்பவருக்கு அந்த இடத்தை விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட மாதிரி பத்திரத்தை (Draft Deed) சரிபார்க்க சார் பதிவாளர் அலுவலகத்தில் கமலக்கண்ணன் என்பவர் மனு அளித்துள்­ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்­பட்­டி­ருந்­தது.

இந்த புகார் மனு மீது விசா­ரணை நடத்தி நட­வ­டிக்கை எடுக்­கும்­படி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீ­சுக்கு கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் உத்­­த­ர­விட்டார். அதன் பேரில் மத்­திய குற்­றப்­பி­ரிவு கூடுதல் கமி­ஷனர் செந்தில்குமாரி ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர் நிஷா மேற்பார்வையில், போலி ஆவண புலனாய்வு பிரிவு, காவல் ஆய்வாளர் ஷீஜாராணி தலைமை யிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை நடத்­தி­னர். இதில் சார்­ப­தி­வாளர் அளித்த புகார் உண்மையென தெரியவந்தது. அத­னை­ய­டுத்து கடந்த 03.05.2024 அன்று மோசடியில் ஈடுபட்ட கமலக்கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

கமலக்கண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் படி போலியான ஆவணங்கள் தயார் செய்த படப்பையைச் சேர்ந்த படப்பை சுரேஷ்குமார், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ் சௌத்ரி மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜீ ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் தலை­ம­றை­வா­ன­தை­­ய­டுத்து நேற்று (29.05.2024) சுரேஷ்குமார், யுவராஜ் ஆகிய இரு­வ­ரையும் போலீசார் கைது செய்­த­னர். போலி ஆவணம் தயார் செய்த கோடம்பாக்கத்தில் உள்ள ராசி கிராபிக்ஸ் என்ற கம்யூட்டர் அலுவலகத்தை சோதனை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் சோதனை செய்­தனர். அங்கு போலி ஆவணங்கள் தயார் செய்யப் பயன்படுத்திய 2 CPUs, 2 Monitors, Printer -2, Fake rubber stamps -8, Fake Voter ID-15, Empty rubber stamp handle-35, Fake sale deeds, Tamil Nadu Goverment Holograms, Holograms, Fake Educational Certificates ஆகியவைகள் பறி­முதல் செய்யப்பட்­ட­ன. கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார், யுவராஜ் சௌத்ரி ஆகிய இருவரும் நேற்று (29.05.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment