தூத்துக்குடியில் நேற்று நடந்த இரவு ரோந்துப் பணியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேற்று (21.11.2023) இரவு திடீரென ரோந்து சென்றார். புதுக்கோட்டை, தெய்வச் செயல்புரம், வல்லநாடு, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பேட்மாநகரம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளுக்கு ரோந்து சென்று போலீசாரின் பணிகளை ஆய்வு செய்து ஆங்காங்கே இரவு ரோந்துப்பணியிலிருந்த காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.