சென்னை பாடியில் குடோனில் பதுக்கியிருந்த 400 கிலோ குட்காவை கைப்பற்றி ஆவடி காவல் ஆணையரக போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் போதையில்லா தமிழ்நாடு என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நேற்று 17.09.2023-ஆம் தேதி கொரட்டூர் ஆய்வாளர் ரமேசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது பாடி, ஆபீசர்ஸ் காலனி, கன்னியப்பன் தெருவில் உள்ள குடோனை அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கே மூட்டை மூட்டையாக குட்காா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அந்த குடோனில் குட்காவை பதுக்கி வைத்த சென்னை கோயம்பேடு, அழகம்மாள் நகர், 3வது தெருவைச் சேர்ந்த பெருமாள் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.