அமைதி­யாக நடந்து முடிந்த பார்­லிமண்ட் தேர்தல் வாக்­குப்­ப­திவு: சென்னை நக­ர காவல்­து­றைக்கு பொது­மக்கள் பாராட்­டு

நேற்று தமி­ழகம் முழு­வதும் உள்ள 39 பார்­லிமன்ட் தொகு­தி­களில் நேற்று 19.04.2024 பாரா­­ளு­மன்றத் தேர்தல்2024 வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. தேர்தல் நடப்­பதையொட்டி தமி­ழகம் முழு­வதும் டிஜிபி சங்கர்ஜிவால் உத்­த­ர­வின் பேரில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்­பட்­ட போலீசார் பாது­­காப்புப் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­னர். சென்னை நகரில் கமி­ஷ­னர் சந்­தீப்ராய் ரத்தோர் உத்­த­­ர­வின் பேரில் 5 கூடுதல், 6 கமி­ஷ­னர்கள் இணைக்­க­மி­­ஷ­னர்­கள் மேற்­பார்­வையில் 18 துணை ஆணை­யர்கள் தலை­மையில் தேர்தல் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

பாரா­ளு­மன்ற தேர்தல் பாது­காப்புப் பணி­கள் தொடர்­பாக கடந்த 2 மாதங்­க­ளுக்கு முன்பே கமி­ஷ­னர் சந்­தீப்ராய் ரத்தோர் பல்­வேறு உத்­த­ர­வு­களை பிறப்­பித்­தி­ருந்தார். அதன் பேரில் தென்­சென்னை, வட­சென்னை மற்றும் மேற்கு, கிழக்கு மண்­ட­ல சென்னை காவல் மாவட்­டங்­க­ளில்­­ உள்ள பதட்டம் நிறைந்த வாக்­குச்­சா­வ­டிகள் கணக்­கெ­டுக்­கப்­பட்­டன. அந்தந்தப் பகு­தி­களில் வசிக்கும் தொடர் குற்றச் செயல்­களில் ஈடு­படும் ஆசா­மிகள், வர­லாற்­றுப்­ப­தி­வேடு ரவு­டிகள் கண்­கா­ணிக்­கப்­பட்டு அவர்கள் குண்டர் சட்­டத்தில் சிறை­யில் அடைக்கப்­பட்­டனர். பதட்டம் நிறைந்த வாக்­குச்­சா­வ­டிகள் கண­க்­கெ­டுக்­கப்­பட்டு அங்­குள்ள பாது­காப்பு குறை­பா­டுகள் நிவர்த்தி செய்­யப்­பட்­ட­ன.

கடந்த 1 மாதத்­துக்கு முன்பே சென்னை நகர காவல் எல்­லைகள் அனைத்­தும் நுண்­ண­றி­வுப்­பி­ரிவு போலீ­சாரின் முழு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்டு நுண்­ணி­ய­மாக கண்­கா­ணிக்­கப்­பட்­ட­ன. பல வாக்­குச்­சா­வ­டி­களில் மூத்த குடி­ம­க்­களை பாது­காப்­புப் பப­ணியில் இருந்த காவ­லர்கள் அழைத்துச் சென்று வாக்­குச்­சா­வ­டியில் கொண்டு போய் விட்­டனர். அவர்­க­ளுக்கு குடிப்­ப­தற்கு குடிநீர் வழ­ங்­கவும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. சில வாக்­காளர்­க­ளுக்கு முக­­வரி மாறி­யதால் அவர்­க­ளது வாக்குச்­சா­வ­டிகள் எங்­குள்­ளது என்­பது தெரி­யாமல் அலைந்து திரிந்­தனர். அவர்­க­ளுக்கு காவல்­து­­றை­யினர் வாக்­குச்­சா­வடி குறித்து தகவல் தெரி­வித்து உத­விகள் செய்­த­னர். சென்னை, ராயப்­பேட்டை, பீட்டர்ஸ் காலனி அரசு குடி­யி­ருப்பு தற்­போது இடிக்­கப்­பட்டு அங்கு புதிய அடுக்­கு­மாடி கட்­டடம் கட்­டப்­பட்டு வரு­கி­றது.

அந்த பகு­தியில் வசித்து சுமார் 300 குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள் வாக்­­குச்­சா­வடி எங்­­குள்­ளது என்­பது தெரி­யாமல் அலைந்து திரிந்­தனர். அவர்­களை அங்கு பாது­காப்பு பணியில் நின்­றி­ருந்த அண்­ணாசாலை போலீசார் அழைத்து விசா­ரித்து, பீட்டர்ஸ் சாலையில் உள்ள மோனகன் பள்­ளியில் வாக்­குச்­சா­வடி இருப்­பதை விசா­ரணை செய்து அறிந்து தகவல் தெரி­வித்து அங்கு செல்­லும்­படி தெரி­வித்­த­னர். ­மே­­லும் வாக்­குச்­சா­வ­டி­க்கு 100 அடிக்கு தள்­ளிதான் வாக­னங்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என காவல்­துறை உத்­த­ர­விட்­டி­ருந்­ததால் வாக்­குச்­சா­வ­டிகள் அருகில் போக்­கு­வ­ரத்து நெரிசல் இல்லா­மல் இடவ­ச­தி­யோடு இருந்­தன.

மேலும் வாக்­குச்­சா­வ­டிக்குள் குறைந்த பட்சம் 5 நபர்கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­டதாலும் மற்ற­வர்கள் வௌியில் அமர வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாலும் வாக்­குச்­சா­வ­டிகள் பெரும்­பாலும் பார்ப்­ப­தற்கு நேர்த்­தி­யாக காட்­சி­ய­ளித்­தன. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்­சி­னைகள் எந்த பூத்­திலும் நடை­பெ­ற­வில்லை. இது குறித்து சென்னை சாந்தோம் மேல் நிலைப் பள்­ளிக்கு வாக்­க­ளிக்க வந்த ஒரு மூதாட்டி கூறிய­தா­வது, நடக்க முடி­யாத என்னை காவ­லர்கள் 4 சக்­கர நாற்­கா­லியில் அழைத்துச் சென்று பூத்­துக்குள் கொண்டு சென்று விட்­டனர். நான் சிர­ம­மின்றி வாக்­க­ளித்து விட்டு வந்தேன்” என்­றனர்.

மேலும் சென்னை நகர் வாக்­குப்­ப­திவு முடி­யும் வ ரை தொடர் ரோந்துப் பணியில் இருந்த கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் பதட்டம் நிறைந்த பகு­தி­களில் ஒன்­றான சென்னை மயி­லாப்பூர், பெரம்பூர் உள்­ளிட்ட இடங்­களில் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் நேரில் சென்று வாக்­குப்­ப­திவுகள் குறித்து பொது­மக்­க­ளிடம் கேட்­ட­றிந்தார். இந்த வகையில் சென்னை நகரில் கூடுதல் கமி­­ஷ­னர்கள் பிரேம் ஆனந்த் ­சின்­கா (தெற்­கு), ஆஸ்ரா கார்க் (வடக்கு) மற்றும் செந்­தில்­கு­மாரி (மத்­திய குற்­றப்­பி­ரி­வு), ஆர். சுதாகர் (போக்­கு­வ­ரத்து), கபில்­குமார் சரத்கர் ஆகிய 5 கூடுதல் கமி­ஷ­னர்கள் மேற்­பார்­வையில் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் உத்­த­ரவின் பேரில் சென்னை நகரில் தேர்தல் வாக்­குப்­ப­திவு நேற்று மிகவும் அமை­தி­யாக நடை­பெற்­ற­­தை பொது­மக்கள் பாராட்­டி­யுள்­ள­னர்.

Comments (0)
Add Comment