தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் காவலர்கள், காவல் அதிகாரிகளின் தாகத்தை தணிப்பதற்காக நன்னாரி சர்பத் மற்றும் நீர்மோர் பந்தல் திறந்து சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கொளுத்தும் வெயிலில் காவல் பணிபுரியும் காவலர்களின் நலனை காக்க பல்வேறு நடவடிக்கைகளை உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் புது உத்தரவை டிஜிபி அமரேஷ் புஜாரி நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன்படி மத்திய சிறைகளுக்கு நீதிமன்ற