ரூ. 42.49 லட்சம் ஏப்பம் விட்ட நப­ர் கைது: சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

நாமக்கல், மாவட்டம், மோக­னூரைச் சேர்ந்­தவர் சவுந்­தி­ர­பாண்­டியன் (34). இவர் கடந்த ஜன­வரி மாதம் 17ம் தேதி­யன்று சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘எனக்கும் என்னுடன் சேர்த்து பல நபர்களுக்கு அரசு துறைகளில் OA, Record clerk வேலை வாங்கி தருவதாகக் கூறிய சென்னை கோடம்­பாக்கம், ரங்­க­ரா­ஜ­பு­ரத்தைச் சேர்ந்த கந்தசாமி (51) என்பவரிடம் மொத்தம் ரு.42,49,000- கொடுத்தோம். ஆனால் கந்தசாமி பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டார். அவர் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்” கூறி­யி­ருந்தார்.

அந்த மனு மீது உட­ன­டி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில், மத்­திய குற்­றப்­பி­ரிவு கூடுதல் கமி­ஷனர் ராதிகா மேற்­பார்­வையில் வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் தலைமறைவாக இருந்த கந்தசாமியை நேற்று கைது செய்­த­னர். விசாரணைக்குப் பின் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments (0)
Add Comment