2011ஆம் ஆண்டு பேட்ச் காவ­லர்கள் அளித்த ரூ. 25 . 61 லட்சம் நிதி உத­வி: இறந்து போன காவ­லர் குடும்­பத்­­துக்கு எஸ்பி பாலாஜி சர­வணன் வழங்­கி­னார்

தூத்துக்குடியில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான முதல் நிலை காவலர் நட்டார் செல்வம் குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் நட்டார்செல்வம் என்பவர் கடந்த 04.01.2024 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். நட்டார் செல்வம் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 2011ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு காக்கி உதவும் கரங்கள் -2011 சார்பாக ரூபாய் 25,61,250- நன்கொடையாக வசூல் செய்­த­னர்.

அவற்றை காப்பீட்டு பத்திரங்கள், வங்கி நிரந்தர வைப்புத் தொகைகள் மற்றும் ரொக்கமாகவும் இன்று (19.07.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 2011ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன், மறைந்த காவலர் நட்­டார் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.

ஒற்றுமையுணர்வுடனும், கருணையுள்ளத்தோடும் மேற்படி நிதியை வழங்கிய 2011ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு, இந்த பெரிய நிதியுதவி அளித்தமைக்காக நட்டார்செல்வம் குடும்பத்தார் சார்பாகவும், மாவட்ட காவல்துறை சார்பாகவும் எஸ்பி பாலாஜி சர­வணன் பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்த நிதியை திரட்டிய 2011ம் ஆண்டு காவலர்கள் காக்கி உதவும் கரங்கள் – 2011 குழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment