தான் பணி புரிந்த தனியார் நிறுவனத்தில் டேட்டா பேஸ் விவரங்களை திருடி இன்னொரு நிறுவனத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட பெண்ணை ஆவடி சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மெர்க்பிலேம்ஸ் நிறுவனத்தின் கஸ்டமர் தகவல்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்து அதன் மூலம் கடன் தொகைக்கு ஏற்றவாறு பல லட்சங்களில் கமிஷன் தொகையை குணசுந்தரி பெற்று வந்துள்ளார். இதனையறிந்த மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரவலிக்கா ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தார். ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆவடி சைபர்கிரைம் பிரிவு போலீசார் இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் குணசுந்தரி கொரட்டூரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடி தான் பணிபுரிந்து வந்த மெர்க்பிலேம்ஸ் நிறுவனத்தின் கஸ்டமர் டேட்டாபேஸ் விவரங்களை திருடி விற்று கையாடல் செய்து பண மோசடி செய்து வந்தது உண்மை என்பது தெரியவந்தது. குணசுந்தரியை கைது செய்த போலீசார் பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.