போலி எல்ஜி பெருங்­காயம் விற்­ப­னை­: தட்டித் தூக்­கிய ­அம­­லாக்­கப்­பி­ரிவு காவல்­து­றை­

எல்ஜி பெருங்­காயம் போலி­ முத்­திரையை பயன்­ப­டுத்தி விற்­ற இரு­வரை தமி­ழக ­அ­றி­வுசார் சொத்­து­ரிமை அம­லாக்­கப்­பி­ரி­வு போலீசார் கைது செய்­த­னர்.

போலி முத்­தி­ரையைப் பயன்­ப­டுத்தி எல்ஜி பெருங்­காயம் விற்­பனை நடை­பெ­று­வ­தாக தமிழக அறி­வுசார் சொத்­து­ரிமை அம­லாக்­கப்­பி­ரிவு காவல்­து­றை­யி­ல் எல்ஜி நிறுவனத்தின் மேலாளர் கும­ரவேல் புகார் அளித்­தார். தமிழக அம­லாக்­கப்­ப­ணியக குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில் ஐஜி செந்­தில்குமாரி வழி­காட்­டு­தலின் பேரில் எஸ்பி சாம்சன் தலை­மை­யி­லா­ன தனிப்ப­டை­யினர் விசா­ரணை நடத்­தினர்.

இதில் வட­சென்னை பகு­தியில் வீடு­களை வாட­கைக்கு எடுத்து பது­க்கி வைத்து போலி பெருங்­கா­யத்தை மளிகை கடை­க­ளுக்கு சப்ளை செய்­வது தெரி­ய­வந்­தது. அத­னை­ய­டுத்து அறி­வுசார் சொத்­து­ரிமை அம­லாக்­கப்­பி­ரிவு இன்ஸ்­பெக்டர்கள் சாமுண்டீஸ்வரி, புஷ்பா தலைமையில் தனிக்­கு­ழு­வினர் சென்னை மாந­க­ராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து சென்னை கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் கொடுங்கையூர் உட்பட மொத்தம் 6 இடங்களில் உள்ள வீடு­களில் அதிரடி சோதனை நடத்­தி­னர்.

அங்கு போலி பெருங்­கா­யத்தை பதுக்கி வைத்­­தி­ருந்த சீனிவாசன் மற்றும் மூர்த்தி ஆகிய இரு­வ­ரையும் போலீசார் கைது செய்­தனர், வீடு­களை வாட­கைக்கு எடுத்து பெருங்­கா­யத்தை அங்கு பதுக்கி வைத்­து கடை­க­ளுக்கு சப்ளை செய்­துள்­ளனர், அவர்­க­ளிடம் இருந்து எல்ஜி பெருங்காயத்தூள் 50 கிலோ, 26 ஆயிரம் காலி டப்பா, போலியாக தயாரிக்கப்பட்ட அட்டை 16,800, ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2,41,050ஆகும். பெருங்காயத்தை போலியாக தயாரிக்க பயன்படுத்திய இயந்­தி­ரங்­கள், அச்சு, போலி முத்­திரை பதித்த எல்ஜி பிளாஸ்டிக் டப்­பாக்­கள், அதனை பேக்கிங் செய்­வ­தற்கு பயன்­ப­­டுத்­தப்­படும் பொருட்கள் மற்றும் ஸ்டிக்­கர்கள் ஆகி­ய­வற்றை போலீசார் கைப்பற்றினர்.

போலி முத்­தி­ரை­­யைப்­ப­யன்­ப­டுத்­தி விற்­பனை செய்த கும்­பலை கைது செய்த தனிக்­கு­ழு­வி­னரை கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகு­வாக பாராட்­டி­னார்.

Comments (0)
Add Comment