சென்னை நகரில் போலி ­ம­து­பான ஆலை கண்­டு­பி­டிப்­பு: ­அ­ம­லாக்­கத்­துறை அதி­ரடி சோத­னையில் 350 லிட்டர் பறி­மு­தல்: 4 பேர் கைது

சென்னை நகரில் போலி மது­பான ஆலையை கண்­டு­பி­டித்து அதி­ரடி ரெய்டு நடத்­திய அம­லாக்­கப்­ப­ணி­யக காவல்­து­றை­யினர் அங்கு பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த 350 லிட்டர் வெளிமா­நில மது­பாட்­டில்­களை பறி­முதல் செய்­து 4 பேரை கைது செய்தனர்.

தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை கட்டுபடுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வுதுறை அனைத்து முயற்சிகளும் எடுத்துவருகிறது. சென்னை நகரில் அயல்­­நாட்டு போலி மது­பான ஆலை ரக­சி­ய­மாக இயங்கி வரு­வ­தாக அம­லாக்­கப்­ப­ணி­யக காவல்­து­றைக்கு ரக­சிய தகவல் வந்­தது. அதன்பேரில் அம­லாக்­கப்­ப­ணி­யக கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில், ஐஜி கார்த்­தி­கேயன், எஸ்பி ஷியாமளா தேவி மேற்­பார்­வையில் தனிப்­படை போலீசார் விசா­ரணை நடத்­தினர்.

மத்திய புலனாய்வு பிரிவு சென்னை மண்டல காவல் ஆய்வாளர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் தலை­மையில் சென்னை சூளை­மேடு பகு­தியில் ரக­சி­ய­மாக கண்­கா­ணித்­தனர். அப்­போது சூளை­மேடு நெல்சன் மாணிக்கம் ரோட்டில் வந்த ஒரு ஆட்­டோவை மடக்கி சோதனை செய்ததில் அதற்குள் 50 போலி அயல்நாட்டு மதுபானம் பாட்டில்கள் ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ஆட்டோ டிரைவர் கார்த்திக் மற்றும் அதில் பயணித்து வந்த முகமது நசீம்தீன், ராவுத்தர் நைனார் முகமது, சையது அப்துல் காதர் ஆகியோரை போலீசார் கைது செய்­தனர். அவற்றை கோபி என்பவரிடம் வாங்கி, அதிக விலை வைத்து விற்பதாக கூறினார்கள். அதனைடுத்து தனிப்­படை போலீசார் உடனடியாக கோபி என்பவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் அங்­கி­ருந்து தப்­பி­யோடி விட்­டது தெரி­ய­வந்­தது.

அந்த வீட்டை சோதனை செய்ததில் போலி மதுபானம் -210 லிட்டர், பாண்டிச்சேரி மாநில மதுபானம் -220 லிட்டர், ஹரியானா மாநில மதுபானம் 19 லிட்டர், 5,000 காலி மதுபான பாட்டில்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்கப்பயன்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அந்த வீட்­டை வாட­கைக்கு எடுத்து அங்கு வைத்து போலி மதுபானம் தயா­ரித்து பாட்­டிலில் அடைத்து சென்னை நகர் முழு­வதும் விற்­­றது தெரி­ய­வந்­தது.

இதுதொடர்பாக சென்னை அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்­த­னர். சென்னை நகரில் இயங்கி வந்த போலி மது­பான ஆலையை கண்­டு­பி­டித்து அதி­ரடி நட­வ­டிக்கை மேற்­கொண்ட இன்ஸ்­பெக்டர் அன்­ப­ரசி தலை­மை­யி­லான போலீ­சாரை டிஜிபி சங்­கர்­ஜி­வால், கூடுதல் டிஜிபி அமல்ராஜ் ஆகியோர் வெகு­வாக பாராட்­டி­னார்கள்.

இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டண மில்லா சேவை எண்.10581 அல்லது CUG N0.9498410581 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தமிழ்­நாடு காவல்­துறை அம­லாக்­கப்­ப­ணி­யகம் கேட்டுக் கொண்­டுள்­ளது.

Comments (0)
Add Comment