கோவை மாநகரம், பீளமேடு, புராணி காலனியில் வசித்து வந்த சபீர் தாயப்வாக் (வயது 66). இவரது வீட்டில், கடந்த 06.02.2024 ஆம் தேதியன்று இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது,வீட்டின் முன் கதவை இரும்பு கம்பிகொண்டு நெம்பி உடைத்து குரங்கு குல்லா முகமூடி அணிந்த, அடையாளம் தெரியாத, நான்கு நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். கத்தி முனையில் வீட்டில் இருந்தவர்களை, கை கால்களை கட்டிப் போட்டு விட்டு, வீட்டில் இருந்த 29 சவரன் நகைகள்,2 வைர நெக்லஸ், வைரத்தோடு 1 ஜோடி, பணம் ரூ. 10 லட்சம், 2 கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிவிட்டனர்.
காவல்துறை விசாரணையில், எதிரி மூர்த்தி என்பவர் மூளையாக செயல்பட்டதும், அவரது தலைமையில் அம்சராஜன் (31) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மனோஜ்குமார் (31), சுதாகர் (32), தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், ராம்பிரகாஷ் ஆகியோர் தமிழகம் முழுவதும் 78 குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருப்பதும், தெரியவந்துள்ளது. இவ்வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ்குமார் ஏற்கனவே விருதுநகர் மாவட்ட காவல்துறையினரால் 15.06.2024-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி வழக்குகளில் திறமையாகச் செயல்பட்டு துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்த சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தனிப்படையினரை டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.