பொதுமக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு படகில் சென்ற போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.

சென்னை நகரில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் தாக்குதலால் சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது. தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்னைப் பெருநகர பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று மாலை எழும்பூர், நரியங்காடு காவலர் குடியிருப்பு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அங்கு மீட்பு படகில் சென்று காவலர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். மேலும், தேவையான உதவிகளை செய்யுமாறு, காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment