சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 2வது நாளாக வேளச்சேரி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை படகில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, கடந்த 3ம் தேதி இரவு முதல் 4ம் தேதி இரவு வரை சென்னை பெருநகரில் அதிகன மழை பெய்தது. இதனால் சென்னை நகரம் முழுவதும் வரலாறு காணாத
வெள்ளக்காடானது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் என சுமார் 18,400 காவல் அலுவலர்கள்,
சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும் வருகின்றனர். இந்நிலையில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று முன்தினம் எழும்பூர் நரியங்காடு குடியிருப்புக்கு சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து நிவாரணங்கள் வழங்கி வருகிறார்.