சென்­னையில் சிக்­கி­ய ரூ. 6 கோடி கொக்­கைன்: கூண்டோடு சிக்­கிய கீழக்­கரை கும்பல் 8 பேர்: அம­­லாக்கம் மற்றும் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வு போலீசார் அதிர­டி

சென்னை நகரில் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசாரின் அதி­ரடி நட­வ­டிக்­கையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் கீழக்­க­ரையைச் சேர்ந்த 8 பேர் கும்­பலை கூண்­டோடு கைது செய்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்தில் போதைப்­பொருள் நட­மாட்­டத்தை அடி­யோடு ஒழிக்கும் நோக்கில் தமி­ழக அம­லாக்கம் மற்றும் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­­பி­ரிவு போலீசார் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில் தீவிர நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். ராம­நா­த­பு­ரத்தில் இருந்து போதைப்­பொ­ருட்­களை சென்­னைக்கு கடத்தி வந்து ஒரு கும்பல் ரக­சி­ய­மாக விற்­கவுள்­ள­தாக அம­லாக்­கம் மற்றும் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வு போலீ­சா­ருக்கு ரகசிய தகவல் வந்­தது. கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில், ஐஜி செந்­தில்­கு­மாரி, எஸ்பி மயில்வா­கனன் மேற்­பார்­வையில் தனிப்­படை போலீசார் இது குறித்து தீவிர விசா­ரணை மேற்­கொண்­டனர். அப்­போது சென்னை புனித தாமஸ்­ம­லை பகு­தியில் ஒரு வீட்­டுக்குள் போதைப்­­பொருள் கடத்தல் ஆசாமிகள் பதுங்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

அங்கு மாறு­வே­டத்தில் சென்ற போலீசார் அந்த வீட்­டுக்குள் கொக்­கைன் போதைப்­பொ­ரு­ளுடன் தங்­கி­யி­ருந்த ராம­நா­த­புரம் மவட்­டம், கீழக்­க­ரையைச் சேர்ந்த மகேந்­திரன், காசிம், முக­மது முபா­ரக், எட்வர்ட் சாம், முக­மது இத்­ரீஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்­க­ளிடம் இருந்து 1 கிலோ கொக்­கைன் பறிமுதல் செய்தனர். அவற்­றை ராம­நா­த­பு­ரத்தில் இருந்து கடத்­தி­வரப் பயன்­ப­டுத்­தப்­பட்ட 1 கார் மற்றும் 5 செல்­போன்கள் பறி­முதல் செய்­யப்­பட்டன.

ஐந்து பேரிடம் நடத்­திய விசா­ர­ணையின் அடிப்­ப­டையில் கோயம்­பேடு பகு­தியில் தங்­கி­யி­ருந்த அவர்­க­ளது கூட்­டா­ளி­கள் காஜா முகை­தீன். பாண்டி, பழ­னீஸ்­வரன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளிடம் இருந்து மேலும் 1 கிலோ கொக்கைன் பறி­முதல் செய்­யப்­பட்­டது.

கைதான மகேந்­திரன், ராம­நா­த­புரம் மாவட்டம் சாயல்குடியில் வனக்காப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது உறவினர் பாண்டி என்­ப­வர் ராம­நா­த­­பு­ரம் கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்குகளை சேகரிக்கும் போது 1 கிலோ கொக்கைன் கிடைத்துள்­ளது, அதனை மகேந்­தி­ர­னிடம் காட்­டி­யுள்ளார். முதலில் அது என்­ன­வென்று தெரி­யாமல் விழித்த அவர்கள் பின்னர் அதனை மருத்­துவப் பரிசோ­தனை செய்­ததில் அது கொக்கைன் போதைப்­பொருள் என தெரி­ய­வந்­துள்­­ளது. அதனை சென்­னைக்கு கொண்டு வந்து விற்றால் கோடிக்­க­ணக்கில் பணம் கிடைக்கும் என்­பதால் தனது கூட்­டா­ளிகளான காசிம், முக­மது முபா­ரக், எட்வர்ட் சாம், முக­மது இத்­ரீஸ் ஆகி­யோர் மூலம் கொக்­கைனை காரில் கடத்தி வந்து சென்­னையில் விற்க முயன்­றுள்­ளனர். கைப்பற்றப்பட்ட 2 கிலோ கொக்கைனின் சந்தை மதிப்பு ரூ. 6 கோடி.

இந்த போதைப்பொருள் கடத்தல் சதிச்செயலில் வேறு யாரேனும் இணைந்துள்ளனரா என்பதையும் மற்றும் போதைபொருளின் மூலம் அறியவும் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரூ. 6 கோடி மதிப்­புள்ள கொக்­கைன் போதைப்­பொ­ருள் கும்­பலை கைது செய்த தனிப்­படை போலீ­சாரை அம­லாக்கம் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகு­வாக பாராட்­டி­னார்.

Comments (0)
Add Comment