பொது­மக்­க­ளுக்கு நியா­ய­மான சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும்: பயிற்சி முடித்த டிஎஸ்­பிக்­க­ளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறி­வுரை

தமிழ்­நாடு போலீஸ் அகா­­ட­மியில் 24 டிஎஸ்­பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா சென்­னையை அடுத்த ஊன­மாஞ்­சே­­ரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகா­ட­மியில் நடந்­த­து.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரை­யாற்­றினார். அவ­ர் பேசி­ய ­தா­வ­து–

காவல்­துறை துணை கண்­கா­ணிப்­பாளர் பத­விக்கு நேர­டி­யாக தேர்வு செய்யப்­பட்டு ஓராண்டு பயிற்சி முடித்து உடல் உறுதி மன உறுதி மிக்­க­வர்­க­ளாக நீங்கள் களத்­துக்கு போவது மிகவும் பெருமைக்­கு­றி­யது. வலுவான காவல் அடிப்­ப­டை பயிற்­சியில் 9 பெண்கள் உள்பட 24 காவல் அதி­காரிக­ளுக்கு எனது மன­மார்ந்த வாழ்த்­துக்கள் மற்றும் பாராட்­டுக்­களை தெரி­வித்துக் கொள்­கிறேன். காவல் அதிகா­ரிகள் உயர்ரக­மான பயிற்­சி­களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு சுமார் 129 ஏக்­கரில் பரந்து விரிந்த இந்த பயிற்­சி­ய­க­த்தை முன்னாள் முதல்வர் கரு­ணா­நிதி தொடங்­கினார்.

இங்கு பல­வகை சட்­டப்­­ப­யிற்சி, குற்­றங்­களை களை­வது தொடர்­பான பயிற்சி, புல­னாய்வுப் பயிற்சி, கணிணி குற்­றங்கள் தொடர்­பா­ன பயிற்சி, பெண்கள் குழந்தைகளுக்­கெ­தி­ரான குற்­றங்­களை தடுப்பு தொடர்­பா­ன பயிற்சி, ஆயுதப் பயிற்சி ஆகி­ய­வற்றை திறம்­பட கற்று எந்த சவால்­க­ளையும் எதிர்­கொள்ளும் திற­னுடன் காவல் அதி­கா­ரி­க­ளா­கிய நீங்­கள் களத்­துக்கு போவது பெருமை மிக்­கது. இந்த உயர் பயிற்­சி­யகம் மூலம் இது­வரை 5055 நேரடி எஸ்ஐக்கள், 297 காவல்­துறை துணை கண்­கா­ணிப்­பா­­ளர்களுக்­கு அடிப்­படை பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் கடந்த வாரம் 2452 காவ­லர்கள் அடிப்­படை பயிற்சி முடித்து பணியில் சேர்ந்­துள்­ளனர். காவல் பணி என்­பது மக்கள் பிரச்­சி­னையை நேர­டி­­யாக தீர்த்து வைக்கும் மிக உன்­ன­த­மான பணி. பொது­மக்­க­ளுடன் கனி­வாக பேசி, அவர்­க­ளுக்­கான நியா­ய­மான சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும். உயர் தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்த வேண்டும். அதில் நீங்கள் தொடர்ந்து அப்டேட் ஆக­வேண்­டும். அறி­வியல் சார்ந்த விசா­ர­ணையில் அதிக கவனம் செலுத்­த வேண்டும். பீல்­டுக்கு போகும் இந்த நேரத்தில் எப்­படி பிட் ஆக இருக்­கி­றீர்­களோ அதே உறு­தி­யுடன் தொடர்ந்து நீங்கள் இருக்­க வேண்டும்.

பணிச்சுமை மத்­தியில் உங்கள் உடை­மை­க­ளையும் பார்த்துக் கொள்­ள வேண்டும், குடு­ம்­பத்­துடன் செல­விட வேண்­டும். காவல்துறையில் சிறப்­பாக நேர்­மை­யாக பணி­புரிந்து பல பதவி உயர்­வு­களைப் பெற்று மக்கள் சேவையில் சிறந்து விளங்க வேண்டும். நான் மீண்டும் உங்­களை சந்­திக்கும் போது பீல்­டுக்கு போகும் போது உங்கள் ஆலோ­ச­னையின் பேரில் சிறப்பாக மக்கள் பணி ஆற்­று­கிறோம் என நீங்கள் ஒவ்­­வொ­ரு­வரும் சொன்­னாலே அது­வே எனக்கு மகிழ்ச்­சி. தமிழ்­நாட்டுக்கு மக்­க­ளுக்கு துணை­யா­கவும், சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வதில் மிகுந்த அக்­க­ரை­யு­டனும், நீங்கள் அனைவரும் திட்­ட­மிட்டு செயல்­ப­ட­வேண்டும் என வாழ்த்தி விடை­பெ­­று­­கி­றேன்” இவ்­வாறு முதல்வர் பேசி­னார்.

Comments (0)
Add Comment